Sep 2, 2018

திருச்சி அமைச்சர்கள் முக்கொம்பு கொள்ளிடம் ஆய்வு

திருச்சி.         1.9.18

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மதகுகள் பணிகள் இன்னும் நான்கு நாட்களில் பணிகள் நிறைவடையும், தண்ணீர் வரத்து அதிமாக வருவதால் இரும்பு தூண்களை கொண்டு பணிகள் நடைபெற்றுவதாக ஆய்வு பின் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 45 மதகுகள் உள்ளன. இதில் 6-வது மதகில் இருந்து 14-வது மதகு வரை உள்ள 9 மதகுகள் கடந்த 22-ந் தேதி இரவு திடீரென்று இடிந்து விழுந்தன. இதனால் கொள்ளிடம் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறியது. உடைந்த மதகுகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணி ரூ.95 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக 1-வது மதகில் இருந்து 17-வது மதகு வரை 220 மீட்டர் தூரத்துக்கு 3 லட்சம் மணல் மூட்டைகள் அடுக்கி தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அணையின் முன்பாக கான்கீரிட் சுவர் அமைத்தல், மதகு உடைந்த இடங்களில் பாறாங்கற்களை கொண்டு நிரப்புதல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் மதகுகள் உடைந்த இடத்தில் தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்தி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் கடும் சவால் ஏற்பட்டுள்ளது. இதற்காக முக்கொம்பு கொள்ளிடம் அணை சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அணை உடைந்த இடத்தில் மிகவும் ஆழமாக இருப்பதால் அங்கு பாறாங்கற்கள் கொண்டு நிரப்பும்போது, அவை உள்ளே இறங்கி விடுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ராணுவ உதவி கோர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் கொள்ளிடம் அணையின் 6-வது மதகில் இருந்து 14-வது மதகு வரை மட்டுமே உடைந்துள்ள நிலையில் நேற்று பாதுகாப்பு கருதி 5-வது மதகில் பொருத்தப்பட்டு இருந்த மதகை ஏற்றி, இறக்க பயன்படக்கூடிய (கியர் பாக்ஸ்) இரும்பு ராடுகள், சங்கிலிகள் மற்றும் இரும்பு பொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் உத்தரவின்பேரில் தொழிலாளர்கள் அகற்றினார்கள். தற்போது மேட்டூர் அணையில் இருந்து 4 ஆயிரம் கனஅடி மட்டுமே தண்ணீர் வருவதால், காவிரியில் 1,700 கனஅடியும், கொள்ளிடத்தில் 2,300 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்து வருவதால் இனி, பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்காலிகமாக சீரமைக்கும் பணி ரூ.95 லட்சம் செலவில் நடைபெற்று பணிகளை இன்று மாலை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி , பொதுப்பணித்துறை அமைச்சர் பிரபாகரர், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், பரமேஸ்வரி முருகன் மற்றும் பொதுபணித்துறை அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டு பணிகளை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுபணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் பணிகளை குறித்து விரிவாக ஆய்வு செய்தாரா. பின்னர் படகு மூலம் பணிகள் நடைபெற்றுபணிகளை பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது ', முக்கெம்பு மதகுளை பணிகளை பார்வையிட்டு அங்கு பணிகளை குறித்து ஆய்வு செய்ய தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தினார். அதன் பேரில் நான் மற்றும் அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளரமதி, பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் , மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோரிடம் பணிகளை குறித்து ஆலோசனை செய்தேன்.

தண்ணீர் அலம் குறிப்பிட்ட பகுதியில் 14 அடி முதல் 20 அடியாக உள்ளது. அங்கு பெரும் சவலாக இருநாதாலும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இரவு பகலாக 13 பொக்லைனை கொண்டு நாள்  ஓன்றுக்கு 50 ஆயிரம் மூட்டைகளும், மறுபுறமும் பெரிய அளவிலான பாறைகளும் கொண்டும் தண்ணீர் தடுக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இன்று அதிகமாக தண்ணீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது. ஆகையால் இரும்பு தூண்களை கொண்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று அல்லது நான்கு தினங்களில் பணிகளா முடிவடைய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை படுத்தப்பட்டுள்ளது. அது ஓரு புறம் இருக்க புதிய அணைகள் கட்டும் பணிக்கான ஆய்வு பணிகள் நடைபெற்றது. கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை எனபது உண்மையில்லை தேவையான பகுதிக்கு தண்ணீர் வந்து கொணாடு இருக்கிறது.

எந்த அளவுக்கு பணிகளை முடிக்கம் முடியுமோ அந்த அளவுக்கு பணிகளை முடிக்கப்பட்டும் .15 ஆடி அகலத்தில் இருப்பதால் பல்வேறு நுணுக்கங்களை கொண்டு பணிகள் நடைபெற்றது வருகிறது.மணல் மூட்டிகளை அடுக்கி வைப்பது பெரும் சவலாக கொண்டு தொழிலாளர்கள் வேவை பார்த்து வருகிறார்கள். அவ்வப்போது பணிளை குறித்து தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்து வருகிறார். மணல் அள்ளுவதால் இந்த மதகுகள் விழந்தது காரணம்

திருச்சி கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், மணிகண்டம் ஒன்றியத்தில், ராம்ஜி நகர் பகுதியில் புங்கனூர் கிராமத்தில் 750 கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி  முகாம் இன்று நடைபெற்றது. இதில்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி அவர்கள் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். அருகில் புங்கனூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் சின்னத்துரை, புங்கனூர் செல்வம், அக்தர் பெருமாள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் உள்ளனர்.